கி.பி.900 முதல் 1190 வரையில் ஆண்ட பாண்டியர்களுள் ஒருவரான மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் காலத்து மகாமண்டலலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி, வானவன்மாதேவி, குமார பாண்டியன் இராசசிம்மன் மற்றும் தளபதி வல்லாள தேவன், நாராயணன் சேந்தன், பகவதி, மதிவதனி, விலாசினி போன்றோரையும் கதையின் மாந்தர்களாக்க் கொண்டு தமிழ்நாட்டின் பழைய வாழ்க்கை மரபுகளையும் பொருத்தமாக்க் கையாண்டு தமிழ் இலக்கியக் கருத்துகளையும் ஆழமான தத்துவங்களையும் பாண்டிமாதேவி எனும் இந்த வரலாற்றுப் பெருங்கதையினில் அளித்துள்ளார்.