நல்ல தமிழ் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் தரமான நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் லட்சக்கணக்கில் வளர்ந்து வருகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. நூல்களைப் படிப்பது வெறும் பொழுது போக்கிற்கு மட்டுமல்ல, சிந்தனைகளை வளர்த்து, நல்ல செய்திகளைச் சொல்லி வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டுமென எண்ணுகிறார்கள்.
இதற்கெல்லாம், ஈடுகொடுக்கக் கூடியதாக, மனத் திருப்தியை தருவதாக உள்ளத்தில் உயர்வான எண்ணங் களை ஊட்டக் கூடியதாக திருமதி. ரமணிசந்திரனின் நாவல்கள் உள்ளன என்பது வாசகர்களின் மனம் நிறைந்த தீர்ப்பாக உள்ளது. அதனால்தான் நாளுக்கு நாள் வாசகர்களின் எண் ணிக்கை லட்சக்கணக்கில் கூடிக் கொண்டே வருகிறது. இவர்களின் எதிர்பார்ப்பிற்கும் ரசனைக்கும் ஈடுகொ டுக்கக் கூடிய அளவு இந்த நாவல் அமைந்துள்ளது. படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளது.
இந்த நாவல் குமுதத்தில் தொடர்கதையாக வந்து பல லட்சம் வாசகர்களை மகிழ்வித்தது என்பது குறிப்பிடத்தக் கது.
இந்த நாவலை அழகிய நூல் வடிவாக்கித் தருவதிலே நாங்களும் மகிழ்கிறோம். படித்துச் சுவைத்து மகிழுங்கள்.