கவிதை உலகின் சக்கரவர்த்தியாக, உலக மகா கவியாகத் திகழச் செய்யும் கவிதைகளைப் போல அவனுடைய கட்டுரைகளும் அமைந்துள்ளன என்பது உலகப் பிரசித்தம். அவற்றின் பெருமையைத் தமிழ்கூறும் நல்லுலகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
மக்கள் சமுதாயத்தைப் பற்றிய அவனுடைய சிந்தனைகள் பல உரைநடை வடிவில் கட்டுரைகளாக அமைந்துள்ளன. அவன் காலத்திய நடையில் - வடமொழிக் கலப்புடன் அமைந்து வலிமையான உரைநடை. சீரிய உரைநடைக்கும் அவனே வழிவகுத்துச் சென்றுள்ளான். மக்கள் நலம்பெற,நாடு நலம் பெற உலகம் நலம் பெற அன் வழங்கிய சிந்தனைகள் போற்றிப் பாதுகாக்க வல்லன.