'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபாஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேரந்தெடுக்கபட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்து இஸ்லாமியர் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களும் மனோவியல் உணர்வுகளும் இஸ்லாமியத் தொன்மங்களின் வழி அர்ஷியாவினால் அழகான கதைகளாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை ந்தியின் பிரவாகத்திலிருந்து தெறிக்கும் திவலைகளின் வெளிச்ச அழகுகளையும் அவை மீண்டும் நதியோடு கலந்து நகர்வதையும் அர்ஷியாவின் எழுத்துக்கள் பிரதிகளாக்கியுள்ளனர்.