தேடுதலையும் அதன் வலியையும் தேடி அடைதலையும் அதன் விடுதலையையும் இலாவின் கவிதைகள் முன்வைக்கின்றன. சமூக மனத்தின் கட்டமைப்பில் சிறைப்பட்டிருக்கும் சுயத்தை விடுவித்து, நமக்குள் ஆழத்தின் இன்னும் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தையுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக்கொண்டு, காலம் தீண்டாத புதுமை கண்களில் மறுபடியும் இழையும் அதிசயத்தைப் பாடுகின்றன இலாவின் கவிதைகள். தமிழ்க் கவிதையின் புதியதோரு சாயலை நமக்கு அளித்திருக்கிறார் இலா.