சமூக உறவுகள் தந்த அடையாளங்களின் மறுதலிப்பும் சுய அடையாளம் நோக்கிய தேடலும் மறுதலித்த அடையாளங்களைத் தேரிந்தே மறுபடி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் பற்றிய வெளிச்சங்களும் தேவேந்திர பூபதியின் கவிதை உலகு உலாவும் வெளியாக இருக்கின்றன. தான் தேடிய தன் அடையாளத்தை தன் தந்தையிடமும் தன்னிடம் தன் மகனின் அடையாளத்தையும் கண்டுகொள்ளும் வியப்பு இவர் கவிதைகளில் புதிய தளங்களைக் காட்டுகின்றது.