ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறி கொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலை வாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் கணவன், தீவிர சுய பிரக்ஞையுடன் தனது பாலியல் தன்மையைத் தன் அதிகாரத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின் அனைத்து விளிம்புகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள் சாணக்யாவின் கதை மாந்தர்கள். சாணக்யாவின் எழுதுகோல், சிலம்பாட்டக் கலைஞனின் கைச்சிலம்பாக மாறி வாழ்வின் சொற்களை வெளியெங்கும் நிறைக்கிறது.