அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும் தேடிச் செல்வதன் அடையாளங்களை இந்தத் தொகுப்பில் காணலாம். சமகால வாழ்நிலை என்னும் தளத்திலிருந்து நகர்ந்து காலம், வர்க்கம், இனம், பால் பேதம் முதலான தடைகளைக் கடந்த வாழ்நிலை களின் மீது சாணக்யா தன் கவனத்தைச் செலுத்துவதை இந்தக் கதைகள் காட்டுகின்றன.