கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாவது போன்ற இயல்பான விந்தை இக்கவிதையாக்கத்திலும் நிகழ்கிறது. காகம் வடை திருடிய தேய்வழக்குக் கதை நானூற்றைம்பது கோடி ஆண்டு மூப்புள்ள கிழவி பற்றிய நவீனத் தொன்மமாக மாறுகிறது. ஏழு கழுதை வயது என்னும் எளிய கூற்று கவிமொழியாகத் திரிகிறது. வாழ்வின் இடையே பிறந்துகொண்டிருக்கும் சொற்களை விந்தையான அனுபவமாக முன்வைக்கும் கவிதைகள் இவை. இவரது மூன்றாம் தொகுப்பு இது.