ஹனீபாவின் பெயரைக்கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கியகர்த்தாவாகவே வரையறுத்துவிடாது அவரை ஓட்டுமொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப்பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும். ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்திரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்துக்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன.