அன்னைத் தமிழில் எளிய நடையிலே 'விலங்குகளால் வரும் நோய்கள்' என்ற தலைப்பில் டாக்டர். வே. ஞானப்பிரகாசம், துணைவேந்தர் தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அவர்களும், டாக்டர் இரா. மாணிக்கம் பேராசிரியர் மற்றும் தலைவர் நோய்த்தடுப்பு மருந்தியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அவர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
பூனைகளின் மலத்தில் வெளிப்படும், புரோட்டோ சோவாவின் முட்டைகள் கருவுற்றப் பெண்களின் கருவையே அழிக்குமென்றும், மாடுகளில் கருச்சிதைந்து வெளிப்படும் கிருமிகள் ஆண்களையும் மலடாக்கும் என்றும், நாயின் எச்சில் எப்படி மனிதர்களைக் கொல்லும் என்றும், படிப்பவர்களுக்குப் புரியும் வண்ணம் அழகாக விளக்கியுள்ளார்கள்.