மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தை இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்திய நாவல்கள் இந்திய அளவில்கூட மிகவும் குறைவுதான். இதன் பாத்திரங்கள் தங்களால் இட்டு நிரப்ப முடியாத ஏதோ ஒன்றைத் தேடித் தம்மிடமிருந்து தாமே விலகி ஒடிக் கொண்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு மர்மமான நாவல் போலத் தோற்றம் தந்து, வாசிப்பவரை வாழ்வின் மர்மங்களை விடுத்து உறவுகளின் பருண்மையான அரத்தங்களைத் தேடவைக்கிறது.