மொழி, சமயம் குறித்த கல்வியறிவும் கற்பிப்புப் பட்டறிவும் ஓருங்கே வாய்த்திருக்கும் அவர் பொருத்தமாக, இளையோர் மட்டுமன்றி, அறிந்த பெரியவர்களும் தம்மறிவினை விரித்துக் கொள்ளும் முகமாகத் தேர்ந்தெடுத்த தலைப்புகளின் கீழே அவுஸ்திரேலியத் தமிழ் வானொலியிலே 'சுழலும் தமிழ் உலகம்' என்ற நிகழ்ச்சியிலே வழங்கிய உரைகளின் தொகுப்பே இந்நூல். மொழிர வாழ்க்கை, பெண்கள், குடும்பம், பண்டிகை, பொதுவான கருத்துக்கள் ஆகியவற்றை மையங்களாக்கி முப்பது கட்டுரைகள், பொருட்செறிவோடும் சொற்சிக்கனத்தோடும் வரைப்பட்டிருக்கின்றன.