மானுடம் வெல்லுதல் வேண்டும்! இன்னும் வென்றிலது! வெல்லும் முயற்சியாவது உண்டா எனின். வினாக்குறியே எழுகின்றது! வென்று விடாமல் இருக்கவே சாதி,சமய,மதக் கண்மூடித்தனம் - விழித்த கண்ணுடனும் உரத்த குரலுடனும் செயலாற்றிக் கொண்டுள்ளன! போதும் போதாதற்கு அவற்றொடு அரசியல் கட்சி வெளியாட்டங்கள்! அவ்வெறியாட்டைக் குப்பை கொட்டல் போல் விட்டுள் கொண்டு வந்து கொட்டும் தொலைக்காட்சி முதலாம் ஊடகங்கள் இந்நிலையிலும் 'வெல்லவேண்டும் மானுடம்' என்னும் எதிர்கால நோக்கு நல்லவர் உள்ளத்தில் உந்தி, எழும்பிச் கொண்டே இருத்தலால், இன்னும் உயிர்ப்பு அடங்கி ஒடுங்கிப் போகாமல் உள்ளது. அவ்வகையில் கிளர்ந்தது. ஆட்சி வல்லார் - அன்பின் இருக்கை - இறைமை நேயர் - பாவலர் - பாடும் புகழர் திருமிகு.ஐ.இரா. பெருமாள் அவர்கள் படைப்பு.