வெகுஜன வாரப் பத்திரிகையில் வெளியாகும் தொடர்நாவல் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது உண்மையாயினும், அத்தொடர் நாவல் புத்தக ரூபமாகி வெளிவருகையில்தான் ஒரு எழுத்தாழனுக்கு வாசகரின் முழுமையான மதிப்பீட்டை அறிந்துகொள்ள முடிகிறது.
பத்திரிகை மூலமாக எனக்கு வரும் கடிதங்கள் அல்லது பத்திரிகைகட்கு தொடர் நாவல் வளரும் போது, முடியும் போது வரும் கடிதங்கள் இவைகளை விட நேரடியாய் எனக்கு, முழுநாவல் படித்த பிறகு வரும் வாசக விமர்சனங்கள் தெளிவாய் இருக்கின்றன.