வெவ்வேறு தளத்தில் உள்ள ஆறு, ஏழு பாத்திரங்களை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து மறுபடியும் பிரித்துப்போட இந்நாவலில் முயற்சி செய்யப் போகிறேன்.
இந்நாவல் ஒற்றைக் கோடாய் ஒரு கொலையாளியை துரத்தியோ, ஒரு பெண் பிள்ளையை முகர்ந்தோ போகாது. முதல் பத்து அத்தியாயங்களுகு வெவ்வேறு ஆட்களின் அறிமுகமாகவே இருக்கும். எனவே ஐந்தாம் அத்தியாயத்திலோ, ஆறாம் அத்தியாயம் வரும் போதோ 'முன் கதை சுருக்கம்' என்று இதற்கு எழுதுவது கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது.