இனிய ஸ்நேகிதங்களுக்கு,வணக்கம்.வாழிய நலம். குருவழி என்ற புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்த பேராதரவு என்னைநெகிழ வைத்தது. பல்வேறு காலகட்டங்களில் எழுதியிருந்த கட்டுரைகளை ஒன்றாகத் தொகுத்து வெளியிடும் போது, அதில் ஒரு முழுமை இருப்பது தெரிந்தது. இப்படி ஒரு முழுமையான ஒரு தொகுப்பாக வருமென்று இந்தக் கட்டுரைகளை எழுதும்போது நான் நினைக்கவில்லை.