தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும்பாலும் ஒரு காலத்தில் ஆசீவர்கட்கு உரியனவாக இருந்தன என்பதையும் திருவெள்ளறை செந்தாமரைக் கண்ணன் திருக்கோவில் உள்ளிட்ட பல திருமால் கோவில்கள் ஆசீவர்கட்கு உரியனவாக இருந்தன என்பதையும் கள ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சுருங்கச் சொன்னால் திருநிலை (கசலட்சுமி)க் கென்று எந்தக் கோவில்கள் எல்லாம் ஆசீவகர்கட்கு உரியனவே ஏனெனில் திருநிலை ஆசீவகச் சமயச் சின்னமாகும்.