2025ஆம் ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற நாவல்
இஸ்த்வான் — ஹங்கேரியின் ஒரு சாதாரணக் குடியிருப்பில் வளர்ந்த, இயல்பாகப் பேசிப்பழகாத இளைஞன். திருமணமான பெண்ணுடன் அவனுக்கிருந்த ரகசிய உறவின் காரணமாக அவனது வாழ்க்கை கடினமான பாதைக்குத் தள்ளப்படுகிறது. சிறைவாசம், இராணுவச்சேவை, அதற்குப்பிறகான இடம்பெயர்தல், செல்வந்தர்களின் உலகம் என்பது வரை அவன் அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஒரு மனிதன் எவ்வாறு உடலின்வழியே வாழ்க்கையைச் சுமக்கிறான் என்பதை வெளிப்படுத்துகின்றன.
ஊன் என்பது துய்த்தல், அதிகாரம், வர்க்கபேதம், ஆண்மை, விருப்பம், அடையாளம் — இவையனைத்திற்கும் நடுவே ஒருவரின் உள்ளார்ந்த பயணத்தை, மிகச்சிறிய வாக்கியங்களாலும் ஆழமான மௌனங்களாலும் பதிவுசெய்கிறது, இந்த நாவல். குறைவான சொற்கள்; ஆனால் மிகுந்திருக்கும் உணர்வுகள்கொண்டது. இஸ்த்வானை வடிவமைப்பது, அவன் செய்யும் செயல்கள் மட்டுமல்ல; அவன் சொல்லாத வார்த்தைகளும் அவன் வாழ்க்கையில் எங்கு செல்கிறான் என்பது மட்டுமல்ல; எவ்வாறு தப்பிப் பிழைக்கிறான் என்பதும்.
இந்த நாவல், இருத்தியல் என்பதன் பௌதிகம். செயலின்மையை எதிர்க்கும் உலகில், வாழும் உடலாக இருப்பதுகுறித்த புனைவு. உடல் என்ற ஒன்று, மனிதனின் விதியாக மாறும் உலகத்தில் லட்சியங்கள், வாழ்வாதாரம், அணுக்கம், உளச்சோர்வு எனும் வாழ்க்கையின் சிக்கல்கள் அனைத்தும் இந்நாவலில் பேசப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற இந்த நாவல், சமகால ஆங்கில இலக்கியத்தில் டேவிட் ஸலாயின் தனித்துவமான குரலை உறுதிப்படுத்தும் படைப்பு.