வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்கள்,மனித உறவுகளின் நுட்பங்கள் மற்றும் மனதின் ஆழமான உணர்வுகளை நேர்த்தியாகப் பதிவு செய்யும் உலக இலக்கியப் படைப்பு .
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகெர்லாவ் எழுதிய போர்ச்சுகல்லியாவின் சக்கரவர்த்தி என்ற இந்த நாவலை ஸ்வீடிஷ் சிங் லியர் என்று அழைக்கிறார்கள். ரஃப்லக் கிராஃப்டின் ஜான் என்ற ஸ்வீடிஷ் விவசாயி தனது அன்பு மகளின் பிரிவைத் தாங்கமுடியாமல் கற்பனை உலகில் வாழத் துவங்குகிறார். தந்தையின் பேரன்பைச் சொல்லும் இந்த நாவல் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.