புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து. புதுப்புதுச் சொற்கள். புதிய பிரயோகங்கள், சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார். ஒரு கவிஞருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட இந்த நெடுங்கவிதை பல நூற்றாண்டுகளைக் காணப்போவது உறுதி.