வெற்றிகரமான நான்காம் பதிப்பு தொகுதி-1
நமது இறைசக்தி நம்மை இறைவனாக்கும் ... தகுதியோடு இருந்தால் நம்மைப் பிரபஞ்சம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
தகுதியோடு இருப்பதோ இறைவனின் சித்தமாக இருக்கிறது. தன்னைச் சரிசெய்து கொள்ளும்போது வெற்றி ஆரம்பிக்கிறது. தன்னைச் சரி செய்து கொள்ள சூழ்நிலைகளும், நூல்களும் பெரிதும் உதவிசெய்கிறது. தகுதிகளை மேம்படுத்திக் கொள்ளும் சக்தியைக் கொடு இறைவா! சிறந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடு இறைவா! என எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
இந்நூலை இறைவனின் ஆசிகளுடன் முழு மனதாக படைத்திருக்கிறேன் படித்து அனுபவித்து பயன் பெறுங்கள்.
இறைவன் கொடுக்க நினைத்ததை - மனிதன் தடுக்க முடியாது!
இறைவன் தடுக்க நினைத்ததை - மனிதன் கொடுக்க முடியாது!
திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)