பெரியவாளிடம் ஒரு குறுக்கு விசாரணை :பாபங்கள் எத்தனை வகை? காமம்
என்றால் என்ன? எப்போதும் ஆனந்தமாக இருக்க என்ன வழி? திருவானைக்கா ஆலயத்தில்
மந்திரத்தின் மகிமையால் ஓர் அதிசயம் நிகழ்ந்ததாமே? அது என்ன? எட்டு
சித்திகளை சித்தர்கள் மட்டும்தான் அடையமுடியுமா?இவை மட்டுமல்லாமல் இந்து
தர்மத்தில் இருக்கும், ‘ஏன்?, எதற்கு?, எப்படி?’ என்னும் சந்தேகக்
கேள்விகள் அனைத்துக்கும் மஹா பெரியவா ஆதாரபூர்வமாக, நடைமுறைக்கு
ஒத்துவரக்கூடிய பதில்களை படு சுவாரசியமாக புராணம், இதிகாசம், சின்னச் சின்ன
கதைகள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றோடு கோத்து அளித்திருக்கிறார்.
படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பீர்கள்.