இத்தாலிய நாடோடிக் கதைகள்
இத்தாலிய நாடோடிக் கதைகள் மாய விநோதங்களை நிகழ்த்தும் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமான கதைத் தளங்களில் உருப்பெற்று உலாவும் அதிசயங்களை உள்ளடக்கிய கதைப் புத்தகம்.
இக்கதைகள் கற்பனையின் உச்சபட்ச சாத்தியங்களைத் தொட்டு நிற்பவை. பாட்டுப் பாடும் கடிகாரம். சுண்டெலியைக் காதலிக்கும் இளவரசி, கோழிக்குஞ்சு பையன், ஆபரணச் செருப்பு, விலங்குகளுடன் பேசுபவன், கூந்தல் சீப்பை ஆப்பிள் தோட்டமாக மாற்றிய இளவரசி... என குழந்தைகளை மட்டுமன்றி படிப்பவரை குதூகலப்படுத்தும் சிருஷ்டிகள்.
ஒவ்வொரு கதையும் ஒருவித அங்கதச் சுவையுடனும் மலைப்பைத் தரும் நடையுடனும் சுவைபட எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தேர்ந்த ரசனையை மேம்படுத்திக் கொள்ள உதவும் அருமையான புத்தகம்.