பெரும்பாலும் மண்ணின் முருகியலை. மனித ஆசாபாசங்களைச் சொல்லுகிற கதைகள் இவை. முன்னதிலிருந்து இதன் மனுஷர்களும் மனுஷிகளும் என்னிடம் நெருக்கமான பாதிப்புகளை உண்டாக்கியவர்கள். அவர்கள் வாழ்வை என் வரிகளுக்காகத் தத்தம் செய்திருப்பதன்மூலம் எனக்கு அணுக்கமானவர்களாக மாறியிருக்கிறவர்கள். அவர்களை என் அன்பான வாசகர்களாகிய உங்களின் புதிய நண்பர்களாக்க, பங்காளிகளாக்க முயன்றிருக்கிறேன்."
- கலாப்ரியா