தமிழ்ச் சிந்தனை உலகில் பெளத்தச் சிந்தனை முக்கியமான பகுதி. பெளத்தம் குறித்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி.ஹார்னர் ஆகியோர் பௌத்த மூலாதாரங்களைத் தொகுத்து, அறிமுகம் எழுதி, கோதம புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் சீர்பட எடுத்துரைக்கும் விதமாக இந்நூலினை இயற்றியுள்ளனர். இதனை வாசிப்பது புத்தரின் வரலாறு, போதனைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும்; பழம் பெளத்த ஆதார நூல்களில் அறிமுகம்பெற நல்லதொரு தொடக்கமாக அமையும்.