இந்த ஆவலை நிறைவேற்றும் முறையில், சட்ட அறிவுள்ள சில எழுத்தாளர்கள் உண்மையில் நடைபெற்ற வழக்குகளைக் கதைபோல் எடுத்துச் சொல்லும் புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். சட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதைகள் எழுதியிருக்கிறார்கள். இவற்றின் மூலம் சட்டப் படிப்பு இல்லாத பொதுமக்கள் சட்ட விவரங்களைய்யும், அதன் நுணுக்கங்களையும், அதன் சிக்கலான சில அம்சங்களையும் எளிதில் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.