சிறுவன் உமைபாலன் தங்கப்பிள்ளை. அவன் கதை ஓர் இலட்சியத்தின் கதை. அது புனிதமானது; நல்ல நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் காட்டும் கடமையையும் கொண்டது அவனது வாழ்க்கை. உங்கள் நெஞ்சங்களிலே அவன் என்றென்றும் வாழ்வான். நான் மிகவும் மகிழ்ந்து எழுதிய கதை. அது எனக்குப் பயன் தரும் நூல் இது என்பது என்னுடைய நம்பிக்கை.