அன்பிற்குரிய தோழர். பா. பாலசுந்தரம் மட்டைக் கஞ்சி என்ற தலைப்பில் ஒன்பது சிறுகதைகள் எழுதி. நூலாக வெளியிட முனைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி ஒன்பது கதைகளும் மிகவும் எதார்த்தமாக உள்ளன. படிக்கப், படிக்க ஆவலைத் தூண்டும் விதமாய் அற்புதமாகப் படைத்துள்ளார் தோழர் பாலு. பாலுவின் அனுபவங்களைக் கொண்டு கதைகளாக எழுதியுள்ளார்.
தோழர். பா. பாலசுந்தரத்தின் முயற்சியை ஊக்குவிக்க. உற்சாகமூட்டி அவரைத் தொடர்ந்து எழுத வைக்க. வாசகப் பெருமக்கள் இந்நூலை வாங்கி அவருக்கு வாழ்த்துக் கூற வேண்டுகிறேன்.
இரா.முத்தரசன் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி