வாழ்க்கைக்கு
நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான்
இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும். குறைந்தபட்சம்
நம்முள்ளே இருக்கும் ஆக்ரமிப்புப் பேயின் அசட்டுத் திருப்திக்காகவேனும்
நமது 'எதிரி' உடல் ரீதியாகவாவது குறைப்பட்டால்தான் அந்த மூளியில்தான்
இந்தப் பேய் திருப்தி கண்டு அடங்குகிறது. மகாத்மாக்கள் கூட ரங்காக்கள்தான்.
கல்யாணி வெறும் லட்சியப்படைப்பு. அதைப் பறந்து போகாமலி ருக்கும் பொருட்டே,
தரையில் காலூன்றும் பொருட்டே, காலை ஒடித்துப் போடுகிற கொடுமையில் கதைக்கு
முடிவு கண்டேன்...