கலிலியோ கலிலி (15 பிப்ரவரி 1564 – 8 ஜனவரி 1642), ஒரு இத்தாலிய
இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவஞானி. இவர்
அறிவியல் புரட்சியில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். அவரது சிறந்த
சாதனைகள் தொலைநோக்கியின் மேம்படுத்துதல், மற்றும் அதன் விளைவாக நடத்திய
வானியல் ஆய்வுகள் மற்றும் கோபர்நிகசியத்தை மேம்படுத்துதல் ஆகியவை ஆகும்.
கலிலியோ “நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”,
“அறிவியலின் தந்தை”, மற்றும் “நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக
அழைக்கப்படுகிறார்.