நமது முன்னோர்களின் வரலாறு, பண்பாடு, வாழ்வியல் நெறிகள் போன்றவற்றை அறிந்து கொள்வதன் மூலம் நாம் நமது வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள முடியும். பண்பாட்டு நோக்கில் வரலாற்றைக் கூறுவதில் வரலாற்று நாவல்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. அந்த வகையில் சங்க காலத்தில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு ''சோழனின் மைந்தர்கள்'' என்று சிறுக்கான வரலாற்று நாவலைப் படைத்துள்ளேன்.