மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்தும் உயர்த்தியும் காட்டும் உணர்வே
நகைச்சுவை உணர்வுதான். பேசாத மனிதர்கள் கூட இருக்கிறார்கள் ஆனால்,
சிரிக்காத மனிதரென்று இவ்வுலகில் ஒருவருமில்லை.எந்த இதழைக்
கையிலெடுத்தாலும் சட்டென நம் வாசிப்பை ஈர்ப்பவை 'ஜோக்ஸ்' எனப்படும்
நகைச்சுவைத் துணுக்குகளே. 1990-களில் நடத்திய ‘விடியல்' சிற்றிதழில் நான்
எழுதிய நகைச்சுவைத் துணுக்குகள் சில நூறைத்தொடும் நூலாக்கம் பெறாமலேயே
தொலைந்துபோன அந்த நோட்டை இன்னமும் தேடிக் கொண்டேயிருக்கின்றேன். இனியவர்,
அமைதியானவர், பண்பாளர் என நானறிந்த கவிஞர் மல்லிகை தாசனுக்குள் ஒரு
நகைச்சுவையாளன் இருப்பதை மிகத் தாமதமாகவே கண்டுகொண்டேன். அதிர்ந்து பேசாத
மனிதர் இவர் என்றாலும், எதையும் ஆழமாய், சமூக அக்கறையோடு பார்ப்பவர் என்பதை
தனது நகைச்சுவைத் துணுக்குகளின் வழியாகவும் நிரூபித்துள்ளார்.