'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் புரவலர் திரு.ஜி. வரதராசன்,பி.ஏ. அவர்களைத் தமிழ் - சைவ உலகம் நன்கறியும். தத்துவ அறிவும், சாத்திர ஞானமும் நிரம்பியவர் அவர். இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும் அவர் எழுதிய திருமந்திர உரை நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். அன்னார், இந்நூல் வெளிவருவதற்கு முன்பு எதிர்பாராத விதமாக இறைவன் திருவடி சேர்ந்தார். பொன்றும் அவர் பொன்னுடல் மறைய நேர்ந்தாலும், பொன்றா அவர் புகழுடல் என்றும் நிலைத்து நிற்கும்.