இந்திய ராணுவத்தில் சேர்ந்து படுப்படியாக உயர்ந்துதலைமைத் தளபதி ஆக வேண்டும் என்று அந்த இளைஞன் நினைத்தான்... அது நடக்கவில்லை.இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்வேண்டும் என்று அந்த இளைஞன் நினைத்தான்... அதுவும் நடக்கவில்லை. லண்டன் சென்று சி.ஏ. பட்டம் பெற்ற மிகச் சிறந்த ஆடிட்டர்களில் ஒருவராகப் புகழ்பெற வேண்டும் என்று அக்கவுண்டன்ஸி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த அந்த இளைஞன் நினைக்கவே இல்லை...ஆனால் அதுதான் நடந்தது. அவர் ஆடிட்டர் டி.ஜி.ராஜன். அவருடைய வாழ்க்கை வரலாறு இந்த நூல்.