
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
"காவ்யேஷு நாடகம் ரம்யம்
நாடகேஷு சகுந்தலா
தத்ராபி ச சதுர்தோSங்க:
தத்ர ஸ்லோக சதுஷ்டயம்"
என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் உள்ளது.
"காவியங்களில் ரம்மியமானது நாடகம். நாடகங்களில் ரம்மியமானது சாகுந்தலம். சாகுந்தலத்தில் ரம்யமானது நான்காவது அங்கம். அந்த நான்காவது அங்கத்தில் ரம்மியமானது நான்காவது ஸ்லோகம்" என்பது இதன்பொருள்.
இவ்வாறு கூறுவதில் சிறப்பு உள்ளது. அதாவது இந்த நான்கு ஸ்லோகங்களும் சம்ஸ்கிருத இலக்கியத்தில் சாதாரண நிலையை விட நான்கு மடங்கு அதிக சுவை உள்ளவை. இவ்வாறு புகழ் பெற்ற காளிதாசரின் அந்த நான்கு ஸ்லோகங்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்போம்!
"யாஸ்யத்யஜ்ய சகுந்தலேதி ஹ்ருதயம் சம்ஸ்ப்ருஷ்ட முத்கண்டயா
கண்டஸ்தம்பித பாஷ்பவ்ருத்தி கலுஷம் சிந்தாஜடம் தர்ஸனம்
வைக்லப்யம் மமதாவதீத்ருஸ மிதம் ஸ்னேஹா தரண்யௌகஸ:
பீத்யந்தே க்ருஹிண: கதம் நு தனயா விஸ்லேஷ து:கைர்ணவை:"
இது அந்த ஸ்லோகங்களில் முதலாவது.