முக்கிய நகரங்களில் கம்பன் கழகம் தோற்றுவித்து, கம்ப இராமாயணம் பரப்பி வருகின்றனர். ஆனால் சிலப்பதிகாரம், இராமாயணம் அளவிற்கு இன்னும் புகழ்பெறவில்லை. தமிழர்களின் காப்பியம் தமிழர்களை இன்னும் சரியாக சென்றடையவில்ல்லையே என்ற மனக்குறை எனக்கும், தமிழறிஞர்களுக்கும் உண்டு. அந்த மனக்குறையினை நீக்கிடும் வண்ணமாக வராதுவந்த மாமணியாக இந்நூல் வந்துள்ளது.