அது ஜார்களின் காலம் ரஷ்யா முரட்டுதனமான அதிகார பிடிக்குள் சிக்கி மூச்சுக்குழல் நெரிந்து போயிருந்த நெரம். அப்போதுதான் இந்த கதை நடந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் அகதிகள். அவர்கள் நாடுகடத்தப்பட்ட ஆண்களாகவும், பெண்களாகவும் இருந்தார்கள். தங்கள் நாட்டில் துயரப்படும் மக்களின் சார்பில்,இவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள். அதனால் தனது சொந்த நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டவர்கள், அல்லது ஒடி வந்தவர்கள்.அப்போதிருந்தே ரஷ்யாவிற்குள்ளும் ஒரு புது உலகம் கவியத்துவங்கியது. இருந்த போதிலும், அந்த புதிய உதயத்திற்கான உழைத்த பலரது வாழ்க்கையில் பரிதாபமும், தனிமனித சோகங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அனுபவத்தில் இருந்து நாம்தான், பலவற்றை கற்றும் புரிந்து கொள்ள வேண்டும்.