ஆண்டவன், ஒவ்வொருவரும் உன்னதமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உருவாக்குகிறான். ஆனால் உலகில் பிறந்த எல்லோரும் உயர்வு அடைய முடியாமல், ஆண்டவனின் அன்புப் பார்வையில் நில்லாமல் எங்கோ மறைந்து விடுகின்றனர். ஏன் இந்த நிலைமை? உயர்வான, உன்னதமான வாழ்வை ஆண்டவன் கொடுக்க ஆயத்தமாக இருந்தும் நாம்தான் அதனுடைய சிறப்பினை உணர்ந்து கொள்ளாமல் உயர்வு அடைய முடியாமல் போய் விடுகின்றோம். வளமான வாழ்வு இருந்தும் அதனை வாழ முடியாமல் திகைத்து நின்று வெறும் மனிதனாகாகு விடுகிறோமோ தவிர ஆண்டவனின் அருளைப் பெற்ற முழு மனிதனாக ஆவதில்லை.இந்த வளமையான வாழ்வினை அடைய நாம் செய்ய வேண்டிய செயல்கள் சுலபமானவை; எளிதானவை .இது போன்ற நூல்களைப் படிப்பதால் வாசகர்கள் பொது அறிவும், சுய முன்னேற்றமும்,சிந்தனைத் தெளிவும் பெறுவார்கள் என்பது திண்ணம். மெர்வின் அவர்களுக்கு எங்களது நன்றி.