பழம் பெருமை மிக்க வைத்திய முறையான சித்த மருத்துவம்,இன்று மிகப் பெரும்பான்மையான மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும்,பின்பற்றப் பட்டும் வருவதாகும். கடுமையான பத்தியங்களோ,குறிப்பிட்ட நோய்க்கு மருந்துகளை உட்கொண்ட பின்னர் ஏதும் பக்கவிளைவுகளோ இல்லாதது என்பது மட்டுமின்றி,பெரும் பணச் செலவு இல்லாமல் எளிய செலவிலேயே நிவாரணம் பெற முடியும் என்பதும் சித்த வைத்தியத்தின் தனிச் சிறப்பாகும்.சித்த வைத்தியத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவரும்,குரு சித்த வைத்திய சாலையைத் தோற்றுவித்து கடந்த 40 ஆண்டு காலமாக தம் வைத்திய சிகிச்சை மூலம் எண்ணற்ற மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்து கைராசி டாக்டர் என்ற பெயர் பெற்றுத் திகழ்ந்து வரபவருமான மருத்துவ மாமணி கர்மயோகி டாக்டர் ஆ.நடராசன் அவர்கள் எளிய செலவில் சித்த மருத்துவம்' என்ற இந்நூலை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.