"தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்னும் சொல் பெரும் விவாதத்திற்குரிய சொல்லாக பல்லாண்டு காலமாக விளங்கி வருகிறது. இச்சொல் பிறந்த சூழ்நிலை, வரலாறு, பயன்பாடு, விளைவு எதிர்விளைவு போன்றவை குறித்து மொழி அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் தக்க ஆதாரங்களுடன் ஆராய்ந்து இந்நூலினை திரு.கோ.செங்குட்டுவன் படைத்தளித்துள்ளார். பல வேறு இதழ்களிலும், ஊடகத்திலும் செய்தியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அவரது நிறைந்த அனுபவம் இந்நூல் நெடுகிலும் முத்திரையைப் பொறித்துள்ளது.