வணக்கம். நான் தமிழ்வழியில் கல்வி பயின்றவன்தான். ஆங்கிலம் படிக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், முப்பத்தைந்து ஆண்டுப் பணியில், அரசுக்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும், முதல்வராகவும் ஆங்கிலம் போதித்து நான் பெற்ற பட்டறிவும் இந்நூலை எழுத உதவின. இரண்டு வெகுஜனப் பத்திரிகைளான அவள் விகடன் மற்றும் மல்லிகை மகள் ஆகியவற்றில் நான் தொடராக எழுதியவைதான் இந்தத் தொகுப்பு..