நான்
உன் விரல்களுக்கிடையே வளரும் தாவரம்
உன் நடுங்கும் மூச்சுக்காற்றில் அடிக்கும் அலை
உன் அக்குள் முடியில் பரவும் பொடுகு
உன் மடித்த நாக்கில் உறையும் உப்பு
உன் மார்பில் நகரும் மழைமேகம்
உன் கால்களில் வெடிக்கும் பித்தம்
உன் குருதிக் கால்வாய்களில் குஞ்சு பொரிக்கும் மீன் என்னைத் தேடுபவர்கள்
உன் எலும்பின் சுதையை சுரண்டித்தான் எடுக்க வேண்டும்
என்னைப் புதைக்கவா எரிக்கவா எனக் கேட்பார்கள்
உன் ஆன்மாவின் முப்பத்தியெட்டாவது அறைச் சுவரின்
வலப்பக்க ஓரத்தில்
எளிதில் பெயர்த்து எடுத்துவிட முடியாத
ஓவியமாக என்னை மாட்டிவிடு
-லீனா மணிமேகலை