ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள் முயன்று, நாவல்கள்
எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நூறு நாவல்களையேனும் நானும்
படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த
நாவலை உருவாக்க உதவின.
இந்நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு பூரணத்துவமும்
அமைதியும் ஏற்பட்டது.
இன்னொரு விஷயம்.மனிதகுலத்தில் என்றுமே அதிசயங்களை நம்புவது
வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் என்று எத்தனை
சாதித்தாலும், அதிசயங்கள் தொடருகின்றன. அவற்றின் அளவில் ஏசு, புத்தர்,
சங்கராச்சாரியர், இன்று ஸாயி பாபா என்று தொடருகின்றன.
– கா.நா.சுப்ரமண்யம்