நூர்ஜஹான் தன்னுடைய முப்பத்தியோராம் வயதில் தன்னைப் பெரிதும் நேசித்த
பேரரசர் ஜஹாங்கீரின் இருபதாவது மனைவியானார். மற்ற மனைவியர் எல்லாம்
அந்தபுரத்துக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க நூர் தம் கணவரோடு மிகப்பெரிய
முகலாயப் பேரரசை தாமும் உடனிருந்து ஆட்சி செய்திருக்கிறார்.கணவரின்
உடல்நலம் குன்றி அரசு விவகாரங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையில் தாமே
ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் செய்தார். ஜஹாங்கீர் கைதாகி
சிறைவைக்கப்பட்டிருந்த பொழுது கணவரை விடுவிக்கப் படை நடத்திச் சென்ற
வீராங்கனை அவர். அரசாணைகளில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றதோடு தம்முடைய
பெயர் பொறித்த நாணயங்களை வெளியிடவும் செய்தார் அவர்.