அறிவுலக பேரொளி அவர்கள் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள். அவர்கள் எழுதிய நூல் ‘இஹ்யாவு உலூமித்தீன்’ அது 40 அத்தியாயங்களைக் கொண்டது. அவற்றில் ஒன்று கீதாப் அஸ்ரார் அல்சவ்ம். அதுவே இந்நூல் .
இதில் இமாம் அவர்கள் நோன்பின் மாண்பை பற்றி ஆராய்கிறார்கள். அவர்கள் விளக்கிக் கொண்டு செல்லும்போது நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் அவர்களின் சிந்தனை ஓட்டத்தை நம்மால் பின் தொடர முடியாதிருக்கிறது.
இயன்ற மட்டும் முயன்று தெளிவாக இந்நூலை அல்லாஹ்வின் உதவியால் எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா அவர்கள் தமிழாக்கி உள்ளார்கள்.
இஹ்யாவின் மற்ற நூல்களைப் போலவே இந்நூலையும் மக்கள் படித்து பயன்பெற வேண்டும்.