இந்திய தேசத்தின் இரு கண்களெனப் போற்றப்படுவது மகாபாரதமும், இராமாயணமும், மனிதன் உய்வடைவதற்கான அத்தனை நியமங்கள், நீதிகளைக் காப்பிய நிகழ்வுகள் வாயிலாகச் சொல்லும் நீதிக் களஞ்சியங்கள் இவை. ஒரு சமயம், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ''மகாபாரதம், இராமாயணம் இவற்றில் சொல்லப்படாத மனிதகுல நீதியோ, கதையோ கிடையாது. அவற்றையே இப்போது வேறு சொற்களில்,பெயர்களில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.