கதாசிரியரின் இயற்பெயரே கே, சிவகுமார்தான். சென்னையை சேர்ந்தவர். இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில், எழுத்தாளர் உயர்திரு சுஜாதா அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சி தொடர்கள் இயக்குவதில் ஈடுபட்டிருந்தார். இவரது முதல் சிறுகதை ஏப்ரல், 2016ல் ‘ஜன்னல்’ இதழில் வெளிவந்தது. ‘ஜன்னல்’ இதழின் தொடர் ஆதரவைத் தொடர்ந்து குமுதம், குங்குமம் இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான சென்னையர் கதைகள் தெகுப்பில் இவரது இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.