உலகில் பல்வேறு பிரச்சனைகள். அதில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் பல. அவற்றில் இன்று மனித உயிரோடு விளையாடும் பெரும் பிரச்சனையென்பது எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயும் ஒன்றாகும். விஞ்ஞானத்தின் பரிணாம வளர்ச்சி உலகையே வியாபித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இதற்கொரு விடிவே கிடையாது உலகச் சமுதாயமும் இன்று திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில், எய்ட்ஸை முற்றிலும் ஒழிக்க முடியா விட்டாலும், வருமுன் காப்பது என்ற நோக்கில் இதுபோன்ற சமயங்களில், எய்ட்ஸை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், வருமுன் காப்பது என்ற நோக்கில் இது போன்ற விழிப்புணர்வு நூல்கள் ஏராளமாக இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பேரழிவு சக்தியான எய்ட்ஸின் வீரியத்தை சற்றேனும் குறைக்காதா? என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்நூல் என்பதை வாசகர்களாகிய உள்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.