தன்னுடைய சரித்திரத்தை வெளிப்படுத்தும் கீர்த்தனைகளைப் பாடித் தாமும் ஆனந்தடைந்து பிறரையும் ஆனந்தமடையச் செய்யும் பக்தர்களை ரட்சிக்கின்றார். நாதனில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் முக்கியமான நாதனாக இருக்கின்றார். கஜாஸீரனைக் கொன்ற இவர், தன்னை வணங்கிப் போற்றிய மக்களுடைய பாபங்களை நாசம் செய்கிறவராகவும் விளங்கிறார். இவ்வித மகிமையுள்ள மகா கணபதியை நான் வணங்கிறேன்.